உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு வங்கி கோயம்புத்தூரின் வைஷ்னவி பாலாஜி நமது சிம்ப்ளிசிட்டி நிரூபரிடம் பகிர்ந்துகொண்டதாவது:-

கோவையில் புட் பேங்க் கோயம்புத்தூர் அமைப்பினை துவங்கும் போது எங்களிடம் 4 உறுப்பினர்களே இருந்தனர். தற்போது, நேரடியாக 200 உறுப்பினர்கள் இணைந்து உணவின்றி தவிக்கும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். எங்களது முக்கிய குறிக்கோள் பசியற்ற தேசத்தை உருவாக்குவதே ஆகும். 

வரும் மே 28 ஆம் தேதி உலக பசி தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி 27ம் தேதியன்று கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, புட் பேங்க் கோயம்புத்தூரின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆவணப்படத்தையும் திரையிட உள்ளோம்.

மேலும், உலக பசி தினமான 28ம் தேதியன்று குழந்தைகள் மூலம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் குழந்தைகளிடத்தில் சமூகத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கும். மேலும் அவர்கள் உணவின் முக்கியத்துவத்தையும், பசியை ஒழிப்பதற்கான வழிகளையும் கற்றுக்கொள்வார்கள். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, வஉசி பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசித்தோருக்கு உணவு வழங்கப்படும். இந்த விழிப்புணர்வு மற்றும் உணவு இயக்கத்தில் சேர விரும்பும் குழந்தைகள் உணவு வங்கி கோயம்புத்தூரில் தொடர்பு கொள்ளலாம். இது பசி இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கு எங்களது 160-வது முயற்சி ஆகும்" என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...